சந்திராயன் 2 விண்கலத்தை கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள்: கூகுள் தகவல்

கடந்த 7 ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலைநிறுத்துவதற்கான கடும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்தியர்களை போலவே பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கானோர் அதன் நிலை குறித்து கூகுளில் தேடியதாக கூகுள் தகவல் தெரிவித்துள்ளது.

கூகுளில் அளிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானியர்கள் சந்திரயான் 2 விண்கலம் குறித்த பார்ப்பதற்கு ஆர்வத்துடன் கூகுளில் தேடியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல் விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

பாகிஸ்தானியர்கள் பலர் சந்திராயன் 2, மற்றும் விக்ரம் லேண்டர் குறித்து தேடியது பெரும்பாலான இந்தியர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. எதற்கான சந்திராயன் 2 ஐ பாகிஸ்தானியர்கள் தேடினர் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

Leave a Reply