shadow

சந்தியாவை கொலை செய்தது எப்படி? கணவரின் திடுக் வாக்குமூலம்

தூத்துகுடியை சேர்ந்த சந்தியாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெருங்குடியின் குப்பைத்தொட்டியில் மீட்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக விசாரணை செய்த நிலையில் சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் தான் கொலை செய்தார் என்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

பேப்பர் கட்டிங் எந்திரத்தை வைத்து சந்தியா உடலை 7 பாகங்களாக வெட்டியதாகவும், உடல் பாகங்களை 4 கவர்களில் கொண்டு சென்று குப்பைத்தொட்டியில் போட்டதாகவும், தாம் மட்டுமே உடல் பாகங்களை வெட்டியதாகவும் கணவர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பாலகிருஷ்ணன் ஒரு சினிமா இயக்குனர் என்பதும் கொலைசெய்யப்பட்ட இவரது மனைவி சந்தியா ஒரு துணை நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது,.

 

Leave a Reply