சத்துணவு சாப்பிட்ட 20 மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 20 மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் எடுத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 20 மாணவ மாணவியர்கள் உடனடியாக அருகில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் 20 மாணவ மாணவியர்களுக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.