சட்டமன்ற தீர்மானம் எந்த வகையிலும் பயனளிக்காது: பிரபல வழக்கறிஞர்
மேகதாது அணை கட்ட மத்திய அரசு கர்நாடகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை சட்டமன்ற சிறப்புக்கூட்டம் கூடி கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த தீர்மானம் எந்த வகையில் பயனளிக்கும் என்று வழக்கறிஞர் விஜயன் கூறியபோது, ‘சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யுமே தவிர, கர்நாடக அரசையோ, மத்திய அரசையோ இந்த தீர்மானம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
இதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தில் எழுத்து பூர்வமான மனு அளித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.