shadow

சசிகலாவை பார்க்க குவியும் அதிமுக எம்பிக்கள்: கலைகிறதா எடப்பாடி கூடாரம்?

பெங்களூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சசிகலா நேற்று இரவு சென்னைக்கு வந்து தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கியுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு அவர் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் குளோபல் மருத்துவமனைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என்று நேற்று ஜெயகுமார் கூறியிருந்தபோதிலும் அவரை பார்க்க அதிமுக எம்பிக்கள், சசிகலா தங்கியிருக்கும் தி.நகர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அதிமுக எம்பிக்கள் நாகராஜன், விஜிலா சத்யானந்த் மற்றும் உதயகுமார் ஆகியோர் சசிகலாவை பார்க்க சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவின் வருகை எடப்பாடி அணியினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply