shadow

சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டார்களா? ஜெயகுமார் பேட்டி

பரோலில் வந்த சசிகலாவை மூன்று அமைச்சர்கள் ரகசியமாக தொடர்பு கொண்டதாகவும், இன்னும் ஒரு சில அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த தகவல்களை தமிழக அமைச்சர் ஜெயகுமார் மறுத்துள்ளார்

சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் தவறு என்றும் அவரை தொடர்புகொள்ளும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்

இந்த நிலையில் இன்று பரோல் முடிந்து பெங்களூர் திரும்பும் சசிகலா, தமிழக அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply