சசிகலாவின் சிறைப்புகைப்படம் முதல்முதலாக வைரல்:
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ஹார சிறையில் உள்ள சசிகலாவின் புகைப்படம் அவ்வப்போது வெளிவந்தாலும் அவை சிசிடிவியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாக இருந்தது
இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. சுடிதார் உடை அணிந்து, அவர் நின்று கொண்டிருப்பது போல இருக்கும் அந்த புகைப்படம் குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.