கோவை அருகே 150 கேரள இளைஞர்கள் கைது! போதையில் இருந்ததாக குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் என்ற பகுதியில் கணேஷ் என்பவரின் தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக 150 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து கோவை எஸ்.பி. சுஜித் குமார் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.,

கைது செய்யப்பட்ட 150 இளைஞர்களிடம் ஏராளமான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply