கோலம் போட்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் கோலம் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பாணியை திமுகவினர் உள்பட அரசியல்வாதிகளும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்
கடந்த இரண்டு நாட்களாக பல அரசியல்வாதிகளின் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்கள் தென்பட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது ஒரு அரசியல் கட்சித் தலைவரே இந்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட தொடங்கி விட்டார். அவர் தான் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் அவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட்டதை அந்த பகுதி மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் குடியுரிமை சீர்திருத்த சட்டம் தேச நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.