கோயிலில் கீழே விழுந்து கும்பிட்டு சாமி கும்பிட்ட ராகுல்காந்தி!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது தெரிந்ததே. இந்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல்காந்தி சற்றுமுன் திருநெள்ளி பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றார். அங்கே சாமி சந்நிதானம் முன்னிலையில் கீழே விழுந்து கும்பிட்டு சாமி தரிசனம் செய்தார்

மேலும் அந்த பகுதியில் தான் ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட பகுதி என்பதால் அவர் ஆற்றில் திதியும் கொடுத்தார்

 

Leave a Reply