கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் முக்கிய தீர்ப்பு
கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த ரயில் தீ எரிப்பு சம்பவம் குறித்த வழக்கில் குஜராத் ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
இதன்படி இந்த வழக்கில் 63 பேர் ஏற்கனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு குஜராத் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.