shadow

கொல்கத்தா போட்டியை அடுத்து காலியாகுமா ஸ்மித் கேப்டன் பதவி?

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பதவி பொறுப்பேற பின்னர் ஸ்டீவ் ஸ்மித் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவை வைத்தே ஸ்மித் கேப்டன் பொறுப்பை தொடர்வாரா? என்பதை உறுதி செய்ய முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாளைய போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்திய அணி செம பார்மில் இருப்பதால், அதுவும் ரசிகர்கள் சப்போர்ட் உள்ள கொல்கத்தாவில் இந்த போட்டி நடப்பதால் இந்திய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply