shadow

கொல்கத்தா ஆணையர் கைது குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த இரண்டு நாட்களாக மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவின் காவல்துறை ஆணையருக்கும் சிபிஐக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்த விசாரணைக்கு கொல்கத்தா ஆணையர் ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்றும் அதே நேரத்தில் கொல்கத்தா காவல்துறை▪️ஆணையரை சிபிஐ கைது செய்யக்கூடாது என்றும் காவல் ஆணையரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை சிபிஐ பெறக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.▪️

உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில் ‘இது எங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply