கொரோனா வைரஸ் பாதித்த குழந்தையை தைரியமாக சுமந்து சென்ற தாய்

கொரோனா வைரஸ் பரவியவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல அவர்களை தூக்குவதற்கு அனைவரும் தயங்கி வருகின்றனர். தகுந்த பாதுகாப்புடன் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தன் குழந்தையை எந்தவித பாதுகாப்பும் இன்றி அன்புடன் ஒரு தாய் தூக்கி ஆம்புலன்சில் ஏறும் காட்சியின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது

உலகில் அன்பை வெளிப்படுத்துவது அம்மாவை விட வேறு யாரும் இல்லை என்றும் தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அந்த தாயின் துடிப்பு அந்த வீடியோவில் நிகழ்ச்சியுடன் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply