விலை ரூ.103 மட்டுமே
கிளன்மார்க் நிறுவனம் ஃபேவிபுளு என்ற பெயரில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரித்துள்ளது. இந்த
வைரஸை எதிர்க்கக்கூடிய ஃபேவிபுளூ மருந்தின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மிக தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஃபேவிபுளு என்ற பெயரில் கிளன்மார்க் நிறுவனம் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்து வைரஸை எதிர்க்கக்கூடிய அளவில் இருப்பதாகவும், ஏழை எளியவர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த மருந்தின் விலை ரூ.103 மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்கள் மற்றும் அபாயக் கட்டத்தை எட்டாதவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்ததில் 80% வரை நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதாகவும், இதனால் இந்த மருந்தை விற்பனைக்கான அனுமதியை டி.சி.ஜி.ஐ. வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.