பக்கத்து வீட்டு பெண்ணை கர்ப்பமாக்கிய கணவன்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றபோது திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இரண்டு மாதங்களாக அவர் தாயார் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இன்று முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கியதை அடுத்து அந்தப் பெண் தனது கணவன் வீட்டிற்கு மீண்டும் திரும்பி உள்ளார்

அப்போது தனது கணவருடன் பக்கத்து வீட்டில் உள்ள நடுத்தர வயது பெண்மணி ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதை அவர் கண்டுபிடித்தார். அதுமட்டுமின்றி அந்த பெண் தனது கணவரால் கர்ப்பமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்

இதனை அடுத்து ஆவேசமான அந்தப் பெண் தனது கணவரிடமும் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார் இந்த சண்டையை வேடிக்கை பார்த்த இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் புகைப்படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்

மனைவி ஊருக்குச் சென்ற இரண்டு மாத கேப்பில் பக்கத்து வீட்டு பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது எனினும் இது குறித்து காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது

Leave a Reply