அமைச்சர் திடுக் தகவல்

கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது என அமைச்சர் ஒருவரே ஒப்புக்கொண்டதாக செய்தி வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் தினமும் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா இன்னும் தமிழகத்தில் சமூக பரவலாகவில்லை என்றே முதல்வரும் அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது என அம்மாநில அமைச்சர் ஜேசி மதுசாமி ஒப்புதல் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் சமூக பரவலாக மாறியதை கர்நாடக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply