அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளதாகவும் எனவே எந்தவித அச்சமும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
வளர்ந்த நாடுகள் கூட படுக்கை வசதிகள் இல்லாமல் திணறுகின்றன என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.