கொரோனா பரவல் எதிரொலியாக கோவையில் உள்ள வங்கி ஒன்று திடீரென மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்

கோவையில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் சிலருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து வங்கி நிர்வாகம் உடனடியாக வங்கியை மூடிவிட்டது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள மற்றொரு கிளையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

வங்கி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாக இருந்தால் மீண்டும் இந்த வங்கி திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply