நர்ஸ் ராதிகா அதிர்ச்சி தகவல்
கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நர்ஸ்கள் ஆகியோர் தன்னலம் கருதாது பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களது சேவை மனப்பான்மையை புரிந்து கொள்ளாமல் சில கொரோனா நோயாளிகள் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் நாக்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் ராதிகா என்ற நர்ஸ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெரும்பாலான நோயாளிகள் தாங்கள் எதற்காக மருத்துவமனைக்கு வந்து இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்
மேலும் அவர்கள் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு எரிச்சலை தருகின்றார்கள் தேவையில்லாத பொருட்களை கேட்டு தொந்தரவு படுத்துகிறார்கள். நோயாளிகளை சமாளிப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி PPEs அணிந்து கொண்டு சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் வலி மிகுந்ததாக உள்ளது அதையும் மீறி சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நர்சுகளின் சேவை மனப்பான்மையை நோயாளிகள் புரிந்து கொள்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.