இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அடுத்த மாதம் பொதுமக்கள் ஊழல் தடுப்பூசியை எதிர்பார்க்கலாம் என்றும் கமலஹாசன் டுவிட் செய்துள்ளார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நாளை முதல் அடுத்த கட்டத்தை தொடங்க உள்ளார். இதனை அடுத்து அவர் இன்று கொரோனா தடுப்பூசியை சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்
இதுகுறித்த ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்து கூறியிருப்பதாவது: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.
அடுத்த மாதம் தேர்தல் முடிவடைந்தவுடன் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற அர்த்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த டுவீட் வைரலாகி வருகிறதூ.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021
Leave a Reply
You must be logged in to post a comment.