சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் படு வேகமாக குறைந்து வருகிறது

இதற்கு காரணம் சென்னையில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பது தெரியவந்துள்ளது

சென்னையில் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வில் சென்னையில் மக்களுக்கு 32.7 சதவீதம் பேருக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது

இதனால் சென்னையில் பெரிதாக பாதிப்பு இனிமேல் இருக்காது என்றும் அப்படியே பாதிப்பை ஏற்படுத்தும் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் தெரிகிறது

சென்னை மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் தப்பித்து விடுவார்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply