கொடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பின் தாகத்தை தீர்த்த வன அதிகாரி!

தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் கொடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்றுக்கு வன அதிகாரி ஒருவர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

வன அதிகாரி ஒருவர் காடுகளை சுற்றி வந்து கண்காணித்து வந்தபோது நாகப்பாம்பு ஒன்று தண்ணீர் தாகத்தால் தவித்ததை பார்த்தார். உடனே தனக்காக வைத்திருந்த தண்ணீரை அந்த பாம்பிற்கு லாவகமாக பருக கொடுத்தார்.

நாகப்பாம்பு கொத்தினால் அடுத்த நிமிடமே மரணம் என்று தெரிந்திருந்தும் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் பாம்புக்கு தண்ணீர் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply