கை காட்டுவதற்கே போட்டியா? துரைமுருகனை கிண்டல் செய்த தமிழிசை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைகட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
இந்த நிலையில் உ.பி.,யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், “உத்திரப்பிரதேசம் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர்.” என பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
அகிலேஷ் யாதவ் பேச்சினை துரைமுருகனுக்கு சுட்டிக்காட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘உத்திரப்பிரதேசம் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர்…அகிலேஷ் யாதவ் பேட்டி….திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் என்று கூறிவரும் அண்ணன் துரைமுருகன் பார்வைக்கு…சமர்ப்பணம். கை காட்டுவதற்கே இப்போதே போட்டியா?” என கிண்டலாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர்…அகிலேஷ் யாதவ் பேட்டி….திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்தபிரதமர் என்று கூறிவரும் அண்ணன் துரைமுருகன் பார்வைக்கு…சமர்ப்பணம்.கை காட்டுவதற்கே இப்போதே போட்டியா? //t.co/YKBq1VoIwi
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 16, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.