கே.எஸ்.அழகிரி மீது அவதூறு புகார்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பற்றி சில அவதூறு கருத்துக்களை கூறியதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
இதனையடுத்து அவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனு மீது விரைவில் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.