கேள்விப்பட்டேன், ஜப்பான் போல் தமிழகமும் மாறணும்: விவேக்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் போல் பல குற்றங்கள் நடப்பதற்கு காரணம் இண்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதான் என்று கூறப்படுகிறது.
இந்த பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் ஜப்பானில் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்ட நடிகர் விவேக், ‘கேள்விப்பட்டேன்! ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! இண்டர்நெட்டுக்கு அடிமையாகாமல் இருக்க இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.