shadow

கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபர்கள்: திணறிய அன்புமணி

அதிமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்று விளக்கம் அளிக்க பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நிருபர்கள் கேள்வியால் துளைத்தெடுத்தபோது பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அன்புமணி திணறினார்.

அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறியது உண்மைதான். அப்போது இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு. சூழல் மாறியதால் கூட்டணி வைத்துள்ளோம். 8 ஆண்டுகளாக தனித்து நின்றோம். யாராவது எங்களைப் பாராட்டினீர்களா? பாமக தனித்து நின்றபோது ஒரு எம்எல்ஏவை கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

நாங்கள் கூறிய ஊழல் புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைகள் முடிந்த பின்னர்தான் தெரியவரும். பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவும் எங்களிடம் பேசியது. இப்போது தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார். ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்.

 

Leave a Reply