shadow

கேரள வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் கொடுத்த ரூ.5 லட்சம்

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 40 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் பலகோடி மதிப்பிற்கு பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் வெள்ள நிவாரண நிதியாக திரையுலகினர் தற்போது தாராளமாக கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, ரூ.5 லட்சம் கேரளாவிற்கு நிதி வழங்கியுள்ளார். இதனை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், நடிகர் சங்கம் ரூ.5 லட்சம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply