shadow

கேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையின் பிடியில் இருந்து அம்மாநில மக்கள் மீள இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில் மீண்டும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும், மழை மட்டுமின்றி மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கையை அடுத்து கேரள அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது.

 

Leave a Reply