பெரும் பரபரப்பு

கேரளாவில் தான் முதல் முதலாக கொரோனா வைரஸ் பாதித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டாலும் சமீபத்தில் அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது

இதனால் கேரளா கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது

நேற்று மட்டும் கேரளாவில் 85 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தற்போது கேரளாவில் ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது

Leave a Reply