அதிர்ச்சி தகவல்
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் குற்றச்செயல்கள் மிகவும் குறைந்ததாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் சந்தோஷப்படுத்தியது. ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டதால் மீண்டும் குற்றச்செயல்களும் விபத்துக்களும் அதிகரித்து விட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் குடித்துவிட்டு பைக்கில் சென்ற ஒருவர் தன்னுடைய பைக்கில் அமர்ந்து இருந்த குழந்தை விழுந்து கூட தெரியாமல் அந்த குழந்தையின் தந்தை சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அரியலூர் அருகே ஜெயங்கொண்டான் என்ற பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அப்போது அவருடன் 5 வயது குழந்தையும் சென்றுள்ளது. இந்த நிலையில் துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இருசக்கர வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த தனது குழந்தை கீழே விழுந்து படுகாயமடைந்தது கூட தெரியாமல் செல்வம் முள்புதரில் விழுந்தார்.
குழந்தை மயங்கி கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். துக்க வீட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.