குழந்தையுடன் பணிக்கு வந்த தேர்தல் பெண் அதிகாரி!
தேர்தல் பணிக்கு இரண்டரை வயது குழந்தையுடன் வந்த பெண் அதிகாரி குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறாது.
நேற்று கடைசி கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்றைய தேர்தல் பணியில் இந்த பெண் அதிகாரியும் நியமிக்கப்பட்டிருந்தார். கடும் வெயிலாக இருந்தும் தனது கடமையை நிறைவேற்ற தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் வந்திருந்த இந்த பெண் அதிகாரி, தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒப்படைக்கும் வரை தனது குழந்தையை அருகிலேயே வைத்திருந்தார்.
இவருடைய கடமை உணர்ச்சியை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.