குழந்தையின் தலை துண்டானது ஏன்? பொது சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

இன்று கூவத்தூரில் ஒரு பெண்ணுக்கு நர்ஸ் ஒருவர் பிரசவம் பார்த்தபோது தலை துண்டான அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்,. இந்த நிலையில் குழந்தை தாயின் கருவில் இறந்தே இருந்ததுதான் குழந்தையின் தலை துண்டாக காரணம் என பொது சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசு 2 நாட்கள் இருந்ததே தலை துண்டானதற்கு காரணம் என்றும், குழந்தையின் தலை உடலுடன் பொருத்தி பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பின்னரே குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் 24 மணி நேர மருத்துவமனையில் இரவில் மருத்துவர் பணியில் இல்லாதது ஏன் என்றும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கர்ப்பிணியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply