குழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்

படத்தில் இருக்கும் இந்த பெண் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பெற்ற குழந்தைகளை போல் இரண்டு நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார்

குழந்தைகளை எப்படி தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடி தூங்க வைப்பாரோ, அதே போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் போட்டு தாலாட்டுகிறார். சிலசமயம் குழந்தையை போலவே தனது இடுப்பில் நாய்க்குட்டிகளை வைத்துக்கொண்டு இருப்பார்.

தனது குடும்பத்தில் ஒருவராக இந்த நாய் குட்டிகளை அவர் வளர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply