குளியலறையில் இளம்பெண்ணின் உயிரை பறித்த செல்போன்
செல்போனை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்ற இளம்பெண் அந்த செல்போனினால் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது
ரஷ்யாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். அவர் நேற்று முன் தினம் தந்து வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்ற போது உடன் செல்போனை எடுத்துச் சென்றார். குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தார்
அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன், குளியல் தொட்டிக்குள் விழுந்து அதிலிருந்த மின்சாரம் தண்ணீஈரில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே எவ்ஜீனியா உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது பெற்றோர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.