shadow

குரூப்-4 தேர்வு: 9,500 பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வெறும் 9500 பணியிடங்களுக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தேர்வுக்கு //www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று இன்று நள்ளிரவு (11.59 மணி) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியதாகவும் இதனால் விண்ணப்பதாரர்கள் தவிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பிரச்சனை ஒருசில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டதால் விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

 

Leave a Reply