குட்கா ஊழல்: மாதவராவ், சீனிவாசராவுக்கு காவல் நீட்டிப்பு
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலை பெரும் பரபரப்பில் வைத்திருப்பது குட்கா ஊழல் என்றால் அது மிகையாகாது. சிபிஐ ரெய்டுக்கு பின்னர் பரபரப்பின் உச்சத்திற்கு இந்த விஷயம் சென்றது.
இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் ஆகிய இருவருக்கும் மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாதவராவுக்கு சொந்தமான குட்கா ஆலையில் நேற்று சிபிஐ நடத்திய சோதனையில் 53 இயந்திரங்கள், டன் கணக்கில் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.