குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னை மக்கள் அவதி

சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருவதால் கேன் குடிநீரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான சென்னை மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைக்குள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் கடும் சிரமத்தை பொதுமக்கள் சந்திக்க நேரிடும் என தெரிகிறது

Leave a Reply