குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது: தேர்தல் அதிகாரியிடம் மனு

#டிடிவி தினகரனால் புகழ்பெற்ற குக்கர் சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதால் குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது

இந்த நிலையில் குக்கர் சின்னத்தால் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

Leave a Reply