shadow

குக்கர் சின்னத்தை தேர்வு செய்தது ஏன்? தினகரனின் சூப்பர் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரன் அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு குறிப்பாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியது.

அவர் கேட்ட தொப்பி, கிரிக்கெட் பேட், விசில் ஆகிய சின்னங்கள் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் கடைசியில் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த சின்னம் குறித்து தினகரன் கூறியப்போது, ’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன். தேர்தல் பணிகளை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தொடங்கிவிடுவேன்’ என்று கூறினார்.

ஆர்.கே.நகரில் இனி ஒவ்வொருவரின் வீட்டிலும் பதிய குக்கர் சில நாட்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply