குக்கர் சின்னத்துடன் பிரச்சார களத்தில் இறங்கிய டிடிவி தினகரன்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நமது கொங்கு வேளாளர் கழகத்தின் வேட்பாளருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தினகரன் கேட்டிருந்த கிரிக்கெட் பேட் மற்றும் விசில் ஆகிய சின்னங்களும் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தினகரனுக்கு என்ன சின்னம் ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு சின்னம் ஒதுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து குக்கர் சின்னத்தை பெற்றவுடன் பிரச்சாரத்தில் கையில் குக்கருடன் களமிறங்கினார். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குக்கர் இன்னும் ஒருசில நாட்களில் இருக்கும் என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.