கீழடி அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்.

அகழாய்வு பணியில் ஈடுபட்டு வந்த 60 தொழிலாளர்கள் திடீரென பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கீழடியில் கடந்த சில வாரங்களாக கிடைத்து கொண்டிருக்கும் பழங்கால பொருட்களில் இருந்து தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே உலக வணிகம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு முன்னோடிகளாக இருந்து வந்த உண்மை தெரிய வந்துள்ளது

இந்த நிலையில் கீழடி அகழாய்வுப் பணிகள் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அகழாய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Leave a Reply