என்ன செய்தார் தெரியுமா

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு காதல் கடிதம் எழுதிய ரசிகர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தை தான் பாத்திரமாக வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பது அதைவிட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய் சூர்யா தனுஷ் விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது தீவிர ரசிகர் ஒருவர் தனக்கு காதல் கடிதம் கொடுத்ததாகவும் அந்த காதல் கடிதத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்

இருப்பினும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது கூட தனக்கு யாருமே காதல் கடிதம் கொடுக்க வில்லை என்றும் அந்த ரசிகர் கொடுத்தது தான் முதல் காதல் கடிதம் என்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்பட ஒருசில படங்களில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply