கி.வீரமணி வாயை பசை வெச்சு ஒட்டனும்… அமைச்சர் ஆவேசம்!
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘கி.வீரமணி வாயை பசை போட்டு ஒட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எங்களை கிண்டலடிப்பது, கேலி பேசுவது வாடிக்கையாகப் போய்விட்டது. அவருக்கு இது ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருப்பதி கோயிலுக்குப் போனார். எல்லாக் கோயிலுக்கும் போனார். நாங்களும் கோயிலுக்குப் போகிறோம். இதில் திகவுக்கு என்ன வந்தது.
வீரமணிக்கு என்ன கொள்கை இருக்கிறது. இந்துக்களை அழிக்க வேண்டும், இந்துக் கடவுள்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாக இருக்கிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து அவருக்குப் பணம் வருகிறது. முதலில் அவரது வாயை பசை போட்டு ஒட்ட வேண்டும் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.