shadow

கிளி ஜோசியம் பார்ப்பதாக கூறி பெண்களை வசியம் செய்தவர் வெட்டி கொலை

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பார்க் ரோட்டில் கிளி ஜோசியர் ரமேஷ் மர்மநபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிளி ஜோசியர் ரமேஷ், ஜோசியம் பார்ப்பதாக கூறி பெண்களை வசியம் செய்ததால் பாதிக்கப்பட்ட மர்ம நபர் ஒருவர் இன்று அப்பகுதியில் நோட்டீஸ் வழங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென அந்த மர்ம நபர் கிளி ஜோசியரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.

ஜோசியரை கொலை செய்த மர்ம நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்த நபரை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிளி ஜோசியரை கொலை செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Leave a Reply