கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட அரச்சலூர், வடுகபட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலின்படியும், நேரில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் அடிப்படையிலும், தகுதியான நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படவுள்ளது. (பொதுப் பிரிவினர்-1, எஸ்.சி (அருந்ததியர் – ஆதரவற்ற விதவை முன்னுரிமை – 1)
அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 21 பூர்த்தி அடைந்தும், எஸ்.சி மற்றும் எஸ்.சி. (ஏ) பிரிவினர் அதிகபட்சம் 35 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராகவும், இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவராகவும், தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளையுடைய நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு அட்டை மற்றும் விண்ணப்பத்துடன் மொடக்குறிச்சி வட்டாட்சியரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ செப்டம்பர் 5-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மொடக்குறிச்சி தாசில்தார் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.