காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடி தன்னிடம் கேட்டதாக டிரம்ப் கூறியது ஏற்கனவே சர்ச்சையான நிலையில் தற்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும், ஆனாலும் இந்த பிரச்சனையில் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் மட்டுமே அமெரிக்கா தலையிடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையீடு வேண்டாம் என்ற கொள்கையில்தான் இந்தியா பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இந்தியா ஒப்புக்கொள்ளாது என்றே கருதப்படுகிறது

Leave a Reply