திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் சற்றுமுன் மரணம் அடைந்தார். மணிகண்டனின் உடல் உற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து விசாரணை செய்ய வந்த கோட்டாட்சியரை மணிகண்டன் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply