காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சமீபத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை காவல்துறை உருவாக்குகிறது என்றும், காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழக பாஜகவுக்கான தலைவரை தகுந்த நேரத்தில் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பாஜக தலைமை பதவிக்கான போட்டியில் வானதி ஸ்ரீனிவாசன் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply