ஆந்திர விவசாயிகள் மகிழ்ச்சி

ஆந்திர விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு வாடகைக்கு காளை மாடுகளை எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்த நிலையில் தனது இரண்டு மகள்களையும் வைத்து நிலத்தை உழுதார்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து அந்த விவசாயிக்கு தான் உதவுவதாகவும் அவருடைய தகவல்களை அனுப்பும் படியும் நடிகர் சோனு சூட் தெரிவித்திருந்தார்

மேலும் அந்த விவசாயியின் வீட்டின் முன் நாளையே இரண்டு காளைகள் இருக்கும் என்று கூறினார். இந்த நிலையில் தற்போது ஆந்திர விவசாயிக்கு இலவசமாக டிராக்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட் வாங்கி கொடுத்த டிராக்டர் விவசாயி வீட்டிற்கு சற்று முன் வந்தது. வறுமையால் வாடி, காளை மாட்டை வாடகைக்கு எடுக்க கூட வசதி இல்லாமல் தனது மகளை உழுவதற்கு பயன்படுத்திய விவசாயி தற்போது ஒரு டிராக்டருக்கு ஓனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply